நாட்டியம் - ரங்கநாதன் கவிதைகள்

அந்தி நெருங்கயிலே
அடுக்கு மல்லி பூக்கயிலே
அஞ்சாத வயசுக் காளை
அஞ்சி அவள் அருக வந்தான்
அஞ்சி அருக வந்து
அத்தனை வாசமின்னான்

ஊரோரம் பாறையிலே
ஊது தண்ணீ ஓசையிலே
ஒட்டாத உறவுக்காரி
ஒட்டி அவன் அருக வந்தான்
ஒட்டி அருக வந்து - எனக்கு
உதிரிபூ தொசமின்னாள்

குளத்தங்கரை ஓரத்திலே
கோவில் மணி ஓசையிலே
முத்தாத மீசைக்காரன்
மூச்சடக்கி தவமிருந்தான்
மூச்சடக்கி தவமிருந்து - இது
முப்பிறப்பு பந்தமின்னான்

நட்ட நடு சாமத்திலே
வட்ட நிலா காய்ச்சலிலே
கட்டான உடலழகி - அவன்
கிட்ட நின்னு தலை கவிழ்ந்தாள்
கிட்ட நின்னு தலை கவிழ்ந்து - எனக்கு
போட்டு வச்சா தொசமின்னாள்

கிழக்கு வெளுக்கயிலே
கூட்டாத்துக் கோம்பையிலே - அந்த
சேராத இளஞ்சோடி
சேர்ந்து கிடக்குதையா
நிறைவேறாக் காதலுக்கு
நேர்த்திகடன் ஆனதையா
நரி நாயி கழுகு வந்து - அங்கே
நாட்டியம் ஆடுதையா

கவிஞர். நரியனுர் ரங்கு
செல் : 9442090468

எழுதியவர் : நரியனுர் ரங்கு (18-Apr-14, 5:03 pm)
சேர்த்தது : ரங்கநாதன்
பார்வை : 184

மேலே