நிலை மாறா தன்மை நல்கி விடு

என் இறைவா!!!
என்னை
சீர்மிகு அறிவுடன் படைத்து விட்டாய்
நற்சிந்தனை அருளி வாழ்த்தி விடு!
மோனத்திலான மன அழுக்கையகற்றி
மனத் தூய்மை கொடுத்து விடு!
காமக் கசடுகளைக் களைந்து
கண்ணியம் காக்கும் சக்தி கொடு!
செய்யும் செயல்கள் யாவும்
செம்மை யோங்க செய்து விடு!
ஞாலம் சுற்றி வந்திடினும் மெய்
ஞானம் உள்ளே புகுத்தி விடு!
அலையாய் எண்ணம் மோதிடினும்
பொறுமைகள் உரைக்க செய்து விடு!
இன்ப துன்பம் எது வந்தாலும்
நிலை மாறா தன்மை நல்கி விடு!
விண்ணில் சேரும் காலம் வரை
மண்ணில் உத்தமம் போற்ற காத்து விடு!