+++என் அருகே வந்துவிடு+++
எட்டிப்பார்க்கும்
கண்களுக்கு
கதுவுகளை
மூடி கண்ஜாடை
காட்டும் சுட்டிக்கார நிலவே
நீ ஒரு முறை
என் அருகே வந்துவிடு..........!
உனது
வெளிச்சம் உள்ளத்தில்
கடந்துவந்த பாதைகளை
திரைப்போட்டு
யாபகம்
ஊட்டுகிறதே................!
உன்னை பார்த்து
பரவசம் கொள்ளும்
குழந்தையை தாலாட்டும்
மந்திர ஜாலத்தை
கற்றவன் நீதானே........!
தொடுவானம்
சிவக்க தொலைதூரம்
செல்கிறது
மேகம் உந்தன் ஸ்பரிசத்தை
நட்பாக சுமந்து..........!
இரவுகள் உனக்கு
அழைப்பு விடுகிறது உன்னை
என்றுமே
சுமக்கவிருக்கிறது.......!
மறவாமல்
வந்துவிடு
உனக்காக காத்திருக்கிறேன்
என்றுமே உனக்காக
குடைபிடிக்கிறேன் என்
அன்பு நிலவே.........!