+++காதலை வாழவைப்போமே நம்மோடு+++

பிறப்பு இறப்பு
இரண்டிலும் நான்
இருக்க எனை நீ நேசிக்கிறாய்
எத்தனை காலம்.........!

நாம் இருக்கும்
ஒவ்வொரு தருணத்தையும்
மகிழ்வோடு
செலவு
செய்திடலமே..........!

எதற்கு ஊடல்
எதற்கு சாடல்
இரண்டும் பொய் தானாடி
நமது இருவருக்கும்............!

நீ பொல்லாதவள்
என்று சொல்லிடவா நான்
உன்னை நேசித்தேன்..........!

நீ சொன்னால்
போதுமடி
உயிரையும் துறப்பேன்
நீ என்னில்
உண்மையானால்.........!

உயிரை துறந்து
வாழ்வதை விட உள்ளத்தை
பரிமாறி
வாழ்ந்திடுவோமே
நிலையற்ற
வாழ்வினிலே.........!

காதல் நமக்கு
சுமையில்லை - காதலை
நாம் சுமப்பதுதான்
காதலுக்கு சுமையாக
தெரிகிறது............!

கொஞ்சம்
விட்டுக்கொடுப்போமே
காதலை
வாழவைப்போமே
நம்மோடு...........!

எழுதியவர் : லெத்தீப் (20-Apr-14, 11:33 pm)
பார்வை : 91

மேலே