கருத்திலே பூத்தது-காண்க சசி குமாரின் 160480-

கருத்திலே பூத்தது!!-காண்க சசி குமாரின் 160480-!!

பிறந்தது தெருவோடு;
வளர்ந்தது மழையோடு!
வாழ்வது வெயிலோடு!

பசி வயிற்றோடு!
பள்ளி கண்ணோடு!
தேடல் குப்பையோடு!
தேவை உயிரோடு!

உழைப்பு உடலோடு!
உயர்வோ கனவோடு!
வீடுகள் தெருவோடு!
வியர்வை மட்டுமே எம்மோடு!

குப்பையில்லா ஊரும்
கோயில் ஆகுமாம்!
குப்பையாய் நாங்கள்
கோபுரம் ஆவமோ?
== சென்று பாராட்டுங்கள் சசிகுமாரை====

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (4-May-14, 7:40 am)
பார்வை : 89

மேலே