நிலவும், தென்றலும்

தென்றலுக்கு கோபம் வந்ததால்
தீயாக மாறி சுட்டதோ?

திங்களுக்கு பேதம் என்பதால்
அது வான் திரை பின் மறையானதோ?

கதிரவனை நாள் தோறும்
பூஜை செய்யும் மனிதரே,

கொஞ்சம் தென்றலையும், திங்களையும்
மதித்து வாழுங்களேன்!

வெளிச்சம் தரும் கதிரவன் முனங்கி
கொண்டால், இருட்டில் அவதி தான்

இரவு நிலவும், இனிய தென்றலும்
கூட நமக்கு தேவை தான்

கோபம் கொண்ட தென்றலையும், பேதம்
காக்கும் திங்களையும் அமைதி செய்யுங்களேன்

வான் நிலவில், வீசும் தென்றலில் நான்
உலவும் இனிய இரவுகளை திருப்பி தாருங்களேன்

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (4-May-14, 7:39 am)
சேர்த்தது : nimminimmi
பார்வை : 100

புதிய படைப்புகள்

மேலே