பேரன் குறள்கள் -04=
யோரன் குறள்படித்து யோசித்தது ==குறள் யாப்பு===
கண்ணால் சிரித்தும், கரங்கொண் டசைத்தும்,உன்
பண்ணார் மழலையில் பாடு!----------------------------31
அண்ணாந்து பார்ப்பாய்; அசைத்துக்கை தூக்கெனும்;
விண்ணேந்த மேக அழைப்பு!----------------------------32
உதைக்கின்ற கால்கள், உதறுமக் கைகள்,
கொதிக்கின்ற தோ,அன்பு? கூறு!------------------------33
புரண்டு படுத்து,தலை பொய்ப்பாம்பாய் ஆடும்
மிரண்டு,நான் போவேன் மிக!----------------------------34
உருண்ட விழிதூக்கி உற்று,நீ பார்த்து
மிரண்டநாள் தோன்றுமோ மீண்டு!--------------------35
கைகால் அசைத்து,எடுக்கக் காட்டும்,உன் ஆணையிலே
மெய்தான் புதிதாம் எனக்கு!-------------------------------36
தென்றல் எனத்தழுவி தேனருவி போல்,கழுவி
என்னை,மகிழ் விப்பான் இவன்!-------------------------37
கண்டால் எடு,என்பாய்; கையில் எடுத்தணைத்துக்
கொண்டால் உதைப்பாய் குதித்து!----------------------38
உதட்டை மடித்தும் உருட்டி விழித்தும்
அதட்டினால் வீரனா டா?-----------------------------------39
பின்னால் மலையேறப் பேரா! பயிற்சியோ?
என்மேல் உதைத்தேறி இன்று!---------------------------40
=========== =================