வெங்காயம்

பறக்கிற பறவையெல்லாம்..
நடப்பதை இழிவென்று நினைபதில்லை
மனிதனாயிருந்தால்...
நடப்பார் பட்டியல் உருவாக்கி..
நலிந்தோர் பட்டியலைப் பெரிதாக்கி...
இடஒதுக்கீடு தந்ததாய்..
இடிமுழக்கம் செய்திருப்பான்...
சமஉடைமைச் சமுதாயம்..
சமைத்துவிட்டேன் என்று.
அங்கே!
பெரியாரும் இருந்திருப்பார்..
எல்லாம்..
வெங்காயம் என்றுரைப்பார்

எழுதியவர் : (9-May-14, 9:56 pm)
பார்வை : 72

மேலே