துய்க்க முறைவகையா லூண் - ஆசாரக் கோவை 25

கைப்பன வெல்லாங் கடைதலை தித்திப்ப
மெச்சும் வகையா லொழிந்த விடையாகத்
துய்க்க முறைவகையா லூண். 25 ஆசாரக் கோவை

பொருளுரை:

கைப்புச் சுவையுள்ள கறியெல்லாம் கடைசி யாகவும், தித்திக்கும் கறியெல்லாம் முதலாவ தாகவும், பிற சுவைகள் உள்ள கறிகளெல்லாம் இடையிலும் முறைப்படி புகழும் வகையால் உணவை உண்ண வேண்டும்.

கருத்துரை:

உண்ணும்போது இனிப்பான கறிகளை முதலிலும், கசப்பான கறிகளை இறுதியிலும் ஒழிந்த சுவைக் கறிகளை இடையிலும் உண்ண வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-May-14, 9:46 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 76

சிறந்த கட்டுரைகள்

மேலே