ஹைக்கூ சென்றியு கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

யாரும் உடைக்காமலே
உடைந்தது
வானவில் !

நேரம் இருப்பதில்லை
வஞ்சகம் நினைக்க
உழைப்பாளிக்கு !

குடிப்பவனின்
உயிர் குடித்தது
மது !

புகைபிடித்தல்
உயிர்க்கு
பகைபிடித்தல் !

துன்பமில்லை
சொல்ல முடிந்ததை மட்டுமே
நினைத்தால் !

கவனம்
சிறிய கல்
பெரிய விபத்து !

எல்லோரும்
இந்நாட்டு மன்னர்கள் சரி
குடிமக்கள் ?

இசையால்
பயிர் வளர்கிறது
மனிதன் ?

இருப்பதில்லை
காகத்தின் ஒற்றுமை
மனிதர்களுக்கு ?

கவனிக்கின்றன குழந்தைகள்
தாய்மொழி
கருவிலேயே !

வருந்தவில்லை காகம்
பொரிந்தது
குயிலின் குஞ்சு !

உணர்க
நம் கையில்
நம் உடல் நலம் !

எதிர்மறை சிந்தனைகளின்
அட்சயப்பாத்திரம்
தொலைக்காட்சி !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (15-May-14, 6:35 pm)
பார்வை : 160

மேலே