* விறகுகளைச் சுமந்து வந்த
ஆல மரம்
அம்மா.

* சிறகுகளை தானம் செய்த
தேவதை.

* காரிருள்,
நீ கைபிடித்து நின்றாள்..
நகர்ந்து வழிவிடும்.

* துப்பாக்கி ஏந்ததா
போராளி..

* என்னிடம் நீ
அடிக்கடி சொல்லும் பொய்..
"நான் அழலயே"

* கடவுள்கள் செய்ததாக கூறப்படும்,
அத்தனை அற்புதங்களையும்
நீ செய்து .. நான் பார்த்திருக்கிறேன்..

* நான் கண் திறந்தது
முதல்
இந்த கவித எழுதுறது வரைக்கும்
எல்லா மூலதனமும்
உன் வியர்வை தானம்மா

எழுதியவர் : சுரேஷ் (16-May-14, 4:58 pm)
பார்வை : 172

மேலே