அம்மா

அம்மா .......... நாம் பிறக்கும் போது
உச்சரிக்கும் மொழி
உலகத்தோரின் பிள்ளையார் சுழி
அன்னை நம் கூட இருக்கும் தாய்

அ ... இருந்து அனைத்தையும்
சொல்லித்தருவாள்
அழும் போது அணைப்பாள்
அன்புடனும் பண்புடனும்
நற் பழக்கங்களை கற்றுத்தரும் ஆசான்

அள்ளிக்கொண்டு
கிள்ளிக் கிள்ளி சிரிக்க வைப்பாள்
சோறு ஊட்ட நிலாவிற்கே கூட்டிச் செல்வாள்
சிந்தனை கதைகளும் சொல்வாள்

நம் வலிகளை
தன் விழிகளில் தாங்குவாள்
சிறந்த உழைப்பாளியும் இவளே

நமக்கு ஏதாவது ஒன்று என்றால்
அவள் படும் பாடு சொல்லமுடியாது
பாசம் காட்டுவதில் தாயை
யாரும் வெல்ல முடியாது

மனிதர்களின் வேராய் இருப்பாள்
நம் இன்பங்களின்
தோழியும் இவளே
அன்னையை விட உலகில்
எதுவும் தேவையில்லை
பெற்ற தாயை மறவோம்
அவள் கண் கலங்காமல் காப்போம்

எழுதியவர் : தேகதாஸ் (18-May-14, 11:26 am)
Tanglish : amma
பார்வை : 322

மேலே