சற்றுமுன் சேமித்துவிடு

மலைகுடையும் சாமி
சொல்வது
---------------மரம் சேமித்துவிடு

மாண்புமிகுவை உபசரித்துச்
சொல்வது
---------------மனிதம் சேமித்துவிடு

நதியை அடைத்தே
சொல்வது
---------------நீர் சேமித்துவிடு

தொழிலைக் கெடுத்தே
சொல்வது
---------------மின்சாரம் சேமித்துவிடு

தமிழைப் படுத்தியே
சொல்வது
---------------தமிழ் சேமித்துவிடு

குடிக்கக் கொடுத்தே
சொல்வது
---------------குடி சேமித்துவிடு

பாதசாரியும் கடனாளிக்குச்
சொல்வது
---------------பணம் சேமித்துவிடு

உதிரம் சிதறிய பிறகே
சொல்வது
---------------உயிர் சேமித்துவிடு

காடுகள் அழிந்தபின்
சொல்வது
---------------புலிகள் சேமித்துவிடு

வீடுகள் தனித்தபின்
சொல்வது
---------------உறவுகள் சேமித்துவிடு

யாதும் யாவும் விழிக்கச்
சொல்வது
---------------சற்றுமுன் சேமித்துவிடு

எழுதியவர் : சர்நா (27-May-14, 1:43 pm)
பார்வை : 134

மேலே