கொஞ்சம் அழகுக்கே

கொஞ்சம் அழகுக்கே முகக்கண்ணாடிய உடைத்தேன் !

கொஞ்சம் அதிகாரத்துக்கே மக்களையே
முறைத்தேன் !

கொஞ்சம் அறிவுக்கே ஆடிக்கொண்டேன் !

கொஞ்சம் மதிப்புக்கே மயங்கிக்கொண்டேன் !

இப்படி காலமுழுக்க ------

கடமை கல்லறையில் பெருந்தன்மை
உயிரை மடித்துக் கொண்டேன் !

வாழ்க்கை சல்லடையில் தற்பெருமை
நீரை வடித்துக் கொண்டேன் !

எழுதியவர் : கவிஞர் வேதா (30-May-14, 3:02 pm)
பார்வை : 72

மேலே