பெருந்தன்மை கவிதை

*
பெருந்தன்மை….!!
*
அம்மாவை மீறி
அப்பா எதையும் செய்வதில்லை
அப்படியே செய்தாலும்,
அம்மாவிடம்
பக்குவமாய்ச் சொல்லிச்
சமாளித்துக் கொள்வார்.
சமாளிப்பது
அப்பாவின் சாதுர்யம்.
விட்டுக் கொடுத்துப் போவது
அம்மாவின் பெருந்தன்மை.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (31-May-14, 12:02 pm)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 384

மேலே