புகழ் தமிழே

பிறமொழி
வியந்து பார்க்கும்
தங்கத்தமிழே.........!

இயலும்
இசையும் நாடகமாய் ஓங்கி
வளர்ந்த முத்தமிழே..........!

ஈடு இணையற்ற
உயர்தனிச் செந்தமிழே.........!

திருக்குறளாய் பெருமை
பெற்ற மொழித்தமிழே..........!

வள்ளுவன் தந்த
உலகப்புகழே பழந்தமிழே........!

எல்லை
இல்லா எழுத்தைப் பெற்ற
சொல்தமிழே..........!

என்னிட
இனிக்கும் இனியது
எங்களின் தங்கத்தமிழே........!

உலகின் முதன்மொழியே
எங்களது இனிய பிறைத்தமிழே........!

இலக்கியத்தின்
இமையமே இசைத்தமிழே.........!

இலக்கணத்தின்
இருப்பிடமே புகழ் தமிழே........!

எழுத்தில்
பேச்சில் என்றும் நிலைத்த
இறைத்தமிழே...........!

எழுதியவர் : லெத்தீப் (4-Jun-14, 4:23 pm)
பார்வை : 141

மேலே