அம்மாவாகி போன அக்கா

அம்மா இருக்கும் வேளைகளில்,அடி தடி சண்டை போடும் அக்கா
அம்மா இல்லா வேளைகளில் எல்லாம் அம்மாவாகி தான் போகிறாள்..!

அக்கா அழகாய் மடித்து வைத்த சுடிதார்களை நான் அணிந்து,
நக்கலாய் சிரிக்கையில், என்னுடைய கசங்கிய சுடிதார்களை
அவள் அணிந்து அடக்கமாய் புன்னகைக்கிறாள்..!

கல்லூரி சுற்றுலா செல்கையில் எல்லாம், உடையும் அக்காவின்
உண்டியல்களில் அவள் அன்பையும் தான் சேர்த்து வைத்திருக்கிறாள்..!

நான் பயந்து எழும் நடு இரவுகளில் எல்லாம், திருநீறு இட்டு
தலை வருடி என்னை தூங்க வைக்கும் அக்கா தான்.,
எனக்கு கடவுளாய் தெரிகிறாள்..!

நான் இழுத்து வரும், வம்பு சண்டைகளை எல்லாம்,
அக்கா பேசி சமாளிக்கும் போது, அவள்
என்னை காக்கும் தெய்வமாகிறாள் ;) ..!

அன்று கணவன் கை பிடித்த அக்கா, வெக்க பட்டு சிரித்ததை விட,
என்னை பிரிந்த கவலையில் துக்க பட்டு அதிகமாய் அழுதாள்..!

இப்படியே தான் என் அக்கா எனக்கு
மிக பிடித்த அம்மாவாகி போனாள்..!

மொத்தத்தில்.., இளைய குழந்தையாய் பிறந்ததற்கு
இறைவனுக்கு நன்றி..!!! :-) :-)

எழுதியவர் : நிஷாந்தினி.கே (6-Jun-14, 9:59 am)
பார்வை : 1203

மேலே