+++வட்டத்தில் நீ வந்து உட்கார்+++

சிறு முதல்தான் நீ....!

நூறு கடல் ஆகிடுவாய்
பொறுமையால்.....!

சிறு துளி மட்டும்
வெற்றிக்கு ஏனிப்படி......!

உனது இறப்பு முடிவல்ல
மீண்டும் தொடருமே........!

உனது நாட்டம்
உலகமா மருமையா......!

நிலையற்ற உலகில்
எதை தேடுகிறாய்.......!

வருகிறாய் செல்கிறாய்
உனக்கு பிறந்தநாள் என்று.......!

சிந்தனை உனக்கே சொந்தம்
தெரிந்துகொள் மனிதனே......!

புலன்களை கையாளும்
வித்தை கற்றவன் நீதானே......!

புரியாத புதிர் உன்னிடத்தில்
விடைகளை சொல்லிவிடு......!

புரிந்தவன் நீ தான்
புரியாமல் ஏன் புலம்புகிறாய்......!

தனிமையை கண்டு
அஞ்சாதே நீதானே தனிமை.....!

பகல் உதிக்கிறது இரவு
பிறக்கிறது என்ன காரணம்.......!

பிறப்பும் இறப்பும் உனது
வாழ்வின் இடைப்பக்கம்......!

படிப்பினை துன்பத்தில்
விழையும் அறிவுதானே......!

நீ சோதிக்கப்படுகிராய்
விரைவில் நீ மானுடனாக......!

எண்ணத்தின் முடிவு
மரணம் என்று நான் சொல்லவா.......!

அலட்சியம் நீ செய்வதால்
அறிவை பெற்றுவிடமுடியுமா.......!

தெரியாது என நீ சொன்னால்
உனக்கு தெரியவரும் உண்மை......!

எழுதியவர் : லெத்தீப் (9-Jun-14, 3:39 pm)
பார்வை : 111

மேலே