உதயதாரகை 0தாரகை0

பிரிவுக் கவிதையொன்று
பிறர் ரசிக்க நானெழுத
கருவாகி நீபோனாய்
காணாமல் எனைவிட்டு

எரியும் நினைவுகளில்
என்னைப் பலியிட்டு
கருகி நானழிய
காரணமாய் நீயானாய்

சருகசையும் சத்தத்தில்
சர்ப்பம்போல் தலைதூக்கி
வருவாயோ நீயென்று
வாசல்வழி விழியோடும்

அருந்திய நீர்கூட
அன்பனைப் பிரிந்ததனால்
மருந்தென கசக்குதடா
விருந்தும் வெறுத்ததடா

பரந்த உன்மார்பில்
பாவையென் முகம்புதைத்து
விரதம் முறித்திடவே
விசும்பல் அடங்கிடவே

செவ்வாய் திறந்திட்டு-பேச
கனிவாய் இருவார்த்தை
தருவாய் இனியவருகை-அருள்
பெறுவாள் உதயதாரகை!

எழுதியவர் : தாரகை (17-Jun-14, 1:08 pm)
பார்வை : 126

மேலே