பௌர்ணமி நிலவே

பூரண பௌர்ணமியே பகலவன் பிரதிபிம்பமான புத்திரனே
பின்பற்றும் பாதை பிறழ்ந்ததால் பிறையாகி பாழ்பட்டுப் போனாயோ
பெயர்த்தும் பெற்றவன் பார்வை பட்டதால் படிப்படியாய்
புத்துயிர் பெற்று பொன்மேனியாய் பொலிவுற்று பூரணமானாயோ .
==============================================
பொருள் =====>
பெயர்த்தும் ===> மீண்டும்.. .
சந்திரன் ஒளிர்வது சூரியனின் ஒளியால் என்பதால் , சந்திரனை சூரியனின் புதல்வனாக ஒரு கற்பனை. சந்திரனின் பாதை சிறிது
சாய்ந்திருப்பதும் விஞ்ஞ்ஆன உண்மை.