விதி
'' விதி !!
'' அறியாமையின் மாற்றுப்பெயர்தான் விதி ,
'' மதியை செலவிடாதவன் கூறுவது விதி ,
'' உண்மையின் உட்கரு அறியாதவன் கூறுவது விதி ,
'' மனிதனின் மடமையை அறிவது விதி ,
'' சோம்பேறியின் சோம்பல் குணம் விதி ,
'' விதி பெரியது முட்டாள் மனிதனுக்கு - அதைவிட ,
மதி பெரியது மா -மனிதனுக்கு ,
'' விதியை நம்புபவன் சதி செயலுக்கு தயங்கமாட்டான் ,
'' மதியை நம்புபவன் சதி செயலுக்கு துனைப்போகமாட்டான் ,
'' விதி உண்மையெனில் மதி இல்லையென ஒப்புக்கொள் ,
சதி செயலை தூண்டாதே ,
''விதியை வெல்வதற்கே உருவாக்கப்பட்டதுதான் மதி -
என்பதை மறவாதே ,,///
'' விதியை தூக்கிலிடு மதியை தூக்கிவிடு ,,, சிவகவி ,,,,,,