என் இதயத்தில் எழுதிய உன் பெயர்
என் இதயத்தில் எழுதிய உனது பெயரை
கண் இமைகளில் மூடி வைத்தேன்
பகல் இரவினில் பூத்த பூவை நீ வரும்
வழியில் நான் விரித்தேன்...
எனக்காக நீ என்று நினைத்து இருந்தேன்
உனக்காக நானில்லை என்று மறுத்துவிட்டாய்
இதற்காகத்தான உன்மீது நானும் ஆசை வைத்தேன்
இனி எப்படி என் இதயம் மாற்றி நடப்பேன்
பெண்ணெல்லாம் பாவி என்று நினைத்து வந்தேன்
உன்னாலே இன்று அதை நான் உணர்ந்தேன்
கண்ணாலே பொய் சொல்லி காதலித்தாய்
உன்னுடைய வார்த்தை எண்ணி ஏமாந்தேன்
நீ என்னுள் இல்லா நிலையில்
விடியாமல் போகும் என் இரவுகளும்
அழியாமல் தொடரும் என் சோகங்களும் - பிரியாமல்
கொள்ளும் உன் நினைவுகளும் நான் என் செய்வேன்....
அன்பே! உன் நலம் வேண்டுமென்றால் என் இதயம் கொள்வேனே
நானில்லா நிலையிலும் உன் இன்பம் பெருகணுமே
நீ போகும் இடத்திலே உன் சந்தோசம் இருக்க - என்
இறைவனை நான் வேண்டுவனே....