அன்றிலிருந்து தான்
அன்றிலிருந்து தான்....
இதயம் சரியாய் துடித்தது,
சுவாசம் சீரானது,
அன்றிலிருந்து தான்...
வலிக்காமல் இமையும் துடித்தது,
கண்ணில் வண்ணம் தெரிந்தது,
அன்றிலிருந்து தான்...
புன்னகைக்கத் தொடங்கினேன்,
மன்னிக்க கற்றுக்கொண்டேன்,
அன்றிலிருந்து தான்...
தோட்டத்தில் பூவும் மலர்ந்தது,
என்னிடம் உன்காதலைச் சொன்ன
அன்றிலிருந்து தான்.......