நீ வள்ளல் - ப்ரியன்

நான் அறியா
எந்தன் வினாவிற்க்கு
நீயே விடை...!

கலை அறியா
இந்த சிற்பிக்கு
நீயே அழகுச்சிலை...!

அடைக்கலம் தேடும்
இந்த பறவைக்கு
நீயே வேடந்தாங்கல்...!

தெய்வம் அறியா
இவனுக்கு வழிகாட்டும்
நீயே தேவதை...!

உன்னை கண்டு
இவன் முகம்மலர்வதால்
நீயே நிலா...!

உன் பார்வை இவனுக்கு
குளிர்ச்சி தருவதால்
நீயே குற்றாலம்...!

உன்னையே எப்போதும்
ஆராய்வதால் இவனுக்கு
நீயே பாடங்கள்...!

தினம் தழுவிச்செல்ல
இவன் விரும்புவதால்
நீயே தென்றல்...!

மாது உன்னை கண்டு
இவன் மயங்குவதால்
நீயே மது...!

ஏழை இவன்
ஆசைகளை தீர்க்(க போ)கும்
நீயே கொடைவள்ளல்...!

எழுதியவர் : ப்ரியன் (24-Jun-14, 11:36 pm)
பார்வை : 131

மேலே