உன் மன வேதனையின் வெடிப்பு

அரை நூற்றாண்டாய்
உன் வாழ்க்கைத் துணையோடு
நீ அமுதுண்ட தட்டு
இன்று காய்ந்து கிடக்க....

உன் உணர்வோடு ஒன்றி
உயிர் அணுவில் கலந்து கிடக்கும்
உன் கணவர்
விண்ணுலகம் சென்றதன் வேதனை
உன்னை தின்று கொண்டிருக்கும் நிலையில்....

ஆண்டாண்டு காலம்
அழுது புரண்டாலும்
மாண்டார் மீண்டு வருவதுண்டோ
என்ற கால தத்துவம்
உனக்கும் தெரியும்....

கண்கள் இடுங்கி
தோல் சுருங்கி,
இடை சிறுத்து
தள்ளாத வயதில்
தனிமையின் கொடுமையை
அனுபவித்து அனுபவித்து
நான்கு சுவர்களுக்குள்
சித்திரவதைப்படும்
உன் மன வேதனையின் வெடிப்பு
எனக்கு புரிகிறது....

ஆனால் அந்த வேதனையே
உன்னை தின்று விட்டால்
உன்னை அண்டி
உன் நிழலில் வாழ்ந்து வரும்
உன் அரவணைப்பில் இருந்து வரும்
ஆதரவற்ற அநாதை குழந்தைகளான
நாங்கள் என்ன செய்வது??

சுய நலமல்ல இது...
உன்னால் எத்தனையோ குழந்தைகள்
வாழ்க்கை பெற்றதால்
வரும் பொது நல வருத்தம் தான் இது...

நன்றாக சாப்பிட முடியாவிட்டாலும்
உயிர் வாழ சாப்பிடு அம்மா.....

எழுதியவர் : சாந்தி (28-Jun-14, 8:36 pm)
பார்வை : 295

மேலே