குறுநகை கொஞ்சம் குடிக்குதடி என்னுயிரை - இராஜ்குமார்

மின்சார கம்பிதனில்
மிதந்து வந்து - உன் வீட்டு
மின் விளக்கின்
விளிம்பில் வீழாமல்
விழி வைப்பேன் - நீ
படிக்கும் அழகை ரசிக்க ..!

நீ
படித்து முடித்து
பட்டென
பட்டனை அணைத்து
படுக்கும் போது - என்
இமை இரண்டும்
இரவாகும்
நீ உறங்க ..!!

உன் தலைக்கு
மேல் அசைந்தாலும்
தாலாட்டுவேன் தாய்மையுடன் ..

பாவை உனை
படிக்கும் போது
காதல் செய்யும்
நான் ..!!
உனை
பார்க்கா பாவி ஆனேன் ...
பகலில் பகலவன்
ஒளியில் - நீ
படிப்பதால் ..!

அரசும் அடிக்கடி
அணைத்து - உயிர்
எடுக்குது எனை ..!

அச்சமயம் ..
.........
மின் வழங்கி வழி
பகுதி நேர
உயிர் கொடுத்து
படிக்கப் பார்த்தாய் ..!!

அப்புத்தக
வரி படித்து
அதை ரசித்து - நீ
சிரிக்கும் போது ....

குமரி - உந்தன்
உதட்டில் தெறிக்கும் .
குறுநகை கொஞ்சம்
குடிக்குதடி என்னுயிரை..!

-- இராஜ்குமார்


============================================================
மின்விளக்கின் மின்சாரத்தில் நான் இருந்தால் என் காதல் இப்படி
============================================================
மின் வழங்கி - UPS

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (2-Jul-14, 1:16 pm)
பார்வை : 136

மேலே