மீண்டும் வானம்பாடி

உதிரம் சேர்த்து உடல் தந்தவள்
உடலால் மட்டும் என்னை பிரிந்தவள்
உலகுக்கு மட்டும் அவள் இறந்தவள்
என்னுடனே என்றும் மனதில் இருப்பவள்

பிறர் கண்களுக்கு மண்ணறையில் வாழ்பவள்
என் கண்களுக்கு உயிரோடு இருப்பவள்
என்னை விட்டு என்றும் பிரியாதவள்
என்னை ஈன்றெடுத்த தாய் அவள்

என் சொல்லுக்கு சொந்தக்காரி அவள்
என் செயலுக்கு வித்திட்டவள் அவள்
என்னை பொன்னாய் சுட்டவள் அவள்
என்றும் புன்னகையோடு வாழவைத்தவள் அவள்

மண்ணறை கண்டாள் அவள் என்றோ
என் வழக்கை வானம்பாடி அற்றது
அவளால் தொலைந்த அந்த வானம்பாடி
மீண்டும் வாழ்வில் வட்டம் போடாதோ.....?

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (3-Jul-14, 10:42 pm)
Tanglish : meendum vaanampaadi
பார்வை : 273

மேலே