கட்டிகிட்டுப் போவாக

நெல்லுக் கதிரு வளருதடி
நெடு நெடுன்னு நெலத்துல தான்..
புல்லு வெட்டப் போகையில
பொறவால தான் வந்தானடி !
களைஎடுக்கப் போகையில
களவாணி போல் வந்தானடி !
தண்ணி பாய்ச்சப் போனவன்தான்
தன்ன மறந்து வந்தானடி !
ஏமாந்து நான் போவேனொன்னு
ஏசி விட்டேன் மாமனத்தான் .....
சாயங்கால நேரத்துல
சடங்கு செய்ய வந்தவுக
கதிரவன் தான் கண்கூச - என்னக்
கட்டிகிட்டுப் போவாக ...!!!!

எழுதியவர் : honey (4-Jul-14, 4:19 pm)
பார்வை : 83

மேலே