மீண்டும் வானம்பாடி - சர்நா

உன் கலிவிலக என் கலிநடமும்
உன் காதலுக்கு என் மெல்லிசையும்
உன் கண்களுக்கு என் படமும்
உன் கவிதைக்கு என் வரவும்

மீண்டும் அசைபோடும் மீள்வில் மிதக்கிறேன்
மீண்டும் ஆசையாடும் மீள்வில் பசையுண்டா?
எஞ்சிய அசையோசையில் மீளுமா என்னிசை?
எந்திர அலைவரிசையில் மீளுமா என்னிசை?

உண்டுவிட நேரமில்லா உன்னோடும் இன்றோடும்
பசுமை வளர்ப்பாயோ? எனைக்கூட்டில் அடைப்பாயோ?
காதலிக்கு தூதுவிடும் கலிநடம் தடுப்பாயே?
கட்டடத்தால் தோதுபடா கலிநடம் வெறுப்பாயே?

திணை சேர்த்து பணம் சேர்த்து
தினம் சோர்ந்து மனம் வேர்க்கும்
உனை குறையாட ஏதுமில்லா என்னிடம்
எனை வரப்பாட ஏதுமில்லை உன்னிடம்

எழுதியவர் : சர்நா (7-Jul-14, 9:20 am)
பார்வை : 264

மேலே