பெண் வதை படலம்

கருவில் இருப்பது
பெண்சிசுவென்றால்
கருணையின்றி
கலைத்துவிடுவர்....!

பிறந்துவிட்டாலோ
இரக்கம் சிறிதுமின்றி
கள்ளிப் பாலூற்றி
வழி அனுப்பிவிடுவர்....!

பிழைத்து வளர்ந்து
காமுகக் கயவர்
கண்களில் பட்டுவிட்டாலோ
கொள்ளைபோகும் கற்பு ....!

காதலிக்க மறுத்தால்
தீர்த்தம் போல்
திராவகம் தெளித்து
திருப்தி படுவர் !

எல்லாம் தாண்டி
கழுத்தில் தாலி ஏறினாலும்
இல்லற வாழ்விலும்
இடியாப்பச் சிக்கல் .....!

அடங்கி நடந்தால்
பிழைத்துக் கொள்ளலாம்
எதிர்த்து நின்றால்
எமனிடம் செல்லலாம் ...!!

வதை பட்டு
வாழ்வதே
வஞ்சியரின்
வரமோ ...!!

எழுதியவர் : ராஜ லட்சுமி (8-Jul-14, 11:54 am)
Tanglish : pen vathai padalam
பார்வை : 131

மேலே