மன அருவி

அருவிக்கு
மழையின் கருணை
இலக்கியங்களுக்கு
கவிஞனின் கருணை.
கருணை பெருகி வர
அருவிகள் பெருகி ஓடும் !
குளிப்பார் இல்லையே என்று
மலையருவிகள் நின்று போவதில்லை !
படிப்பார் இல்லை என்றல் ஒருவேளை
மன அருவிகள் நின்று போகலாம் !
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Jul-14, 7:51 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : mana aruvi
பார்வை : 245

மேலே