தென்றலில் நான் கலந்தால் சுவாசிபாயா என்னை 555

பிரியமானவளே...

பேசிவிடடி ஒரு
வார்த்தை கண்ணே...

காதல்தான் என்
வாழ்க்கை கண்ணே...

சேரவேண்டும் நானும்
உன்னை...

தினம் கொல்லுதடி உன்
நினைவுகள் என்னை...

தேடுகிறேன் காகிதமாய்...

உளறுகிறேன் உன்
ஞாபகமாய்...

மழை மேகமாய் நானிருந்தால்
சேர்வேனடி உன்னை...

தென்றலோடு நான் கலந்தால்
சுவாசிப்பாயா என்னை...

பூக்களாக மலர்ந்தால்
சூடுவாயா என்னை...

கோபம் வேண்டாம்
கண்மணி...

பேசிவிடு இப்போ நீ...

என் சுவாச காற்றே
என் சுவாச காற்றே...

எங்கோ இடி முழக்கம்...

என் கண்ணில்
காதல் கலக்கம்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (16-Jul-14, 6:08 pm)
பார்வை : 312

மேலே