ஆடித் தள்ளுபடி

பசுவோ மடிவற்றி பால்பொடியைத் தூவக்
கொசுவோ கருகும், கொடுந்தீ சிசுவை
வறுத்தெடுக்கும் சித்திரை எனஆடி இன்பம்
நிறுத்தம் கொளச்செய்தா ரே!

தாய்வீடு செல்லும் தனதருமைக் கண்ணாள்
ஓய்வெடுத்துத் திரும்பும் ஒருமாதம் –பாய்மேல்
விரதம் பிடித்து விரகம் வளர்ந்து
நரகம் சுவைத்தல் நடப்பு.

ஆடிக் கழைப்பார்கள் பெண்ணை. அவளோடு
கூடிக் கலந்தவன் இன்பத்தை மூடி
மறைத்து முனிபோலே முற்றும் துறந்து
சிறைபோடல் சிற்றின்பச் சீர்.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (20-Jul-14, 3:49 am)
பார்வை : 125

மேலே