விழிகள் வழிகிறது வருத்தத்தால்​​

தேய்ந்த தேகத்தின் நிலை பாரீர்
வேய்ந்த எலும்பு கூடாய் உடலும்
தோய்ந்த கவலையில் முகமும் ​!

ஏனிந்த நிலையோ இத்தாய்க்கும்
ஏங்கிய பார்வையுடன் விழிகளும்
ஏறிட்டு நோக்குவதும் ஏன்தானோ !

தள்ளாத வயதிலும் தளரா மனதுடன்
தள்ளுகிறார் காலத்தை தரணியிலே
தளர்ந்திட்ட மேனியுடன் வாழ்க்கையிலே !

கைப்பிடித்தவனும் காற்றில் கலந்திட
கைம்பெண் நிலையும் அமைந்திடவே
சுயதொழில் செய்திடும் நிலையன்றோ !

மக்கள் இருந்தும்உனை மறந்தனரோ
மண்ணில் உன்னையும் துறந்தனரோ
தவிக்கவிட்டு உன்னை பறந்தனரோ !

நாளிதழில் கண்டேன் இதனையும்
காணும் காட்சிதான் நானிலத்தில்
விழிகள் வழிகிறது வருத்தத்தால் !

( படம் -தினமலர் )

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (23-Jul-14, 2:52 pm)
பார்வை : 196

சிறந்த கவிதைகள்

மேலே