என்ன கவிதை

என்ன கவிதை எழுத
யோசித்தேன் யோசித்தேன்
மதிக்கு வந்தது மாலை கருக்கல்
மயங்கி மயங்கி சோர்ந்து விட்டதோ
ஒளி படைத்து சக்தி கொடுத்த ஆதவனுக்கு
ஆறுதலாக தண்மை படைக்க வந்ததோ
மனிதா மாலை நேரம் வந்து விட்டேன்
கூடு செல் என சொல்ல தான் வந்ததோ
இதமாக வெட்ட வெளியில் உலா செல்லலாம்
என அறிவிப்பு பலகையாகத் தான்
உலா வருகின்றதோ
இந்த மாலை கருக்கல்

எழுதியவர் : ம. பிளாசிட் நார்பர்ட் (25-Jul-14, 5:29 pm)
Tanglish : yenna kavithai
பார்வை : 155

மேலே