தனித்தமிழ்ச்சிறுகதைப்போட்டி-ஆர்வலர்களின் கவனித்திற்கான அறிவிப்பு

தனித்தமிழ்ச்சிறுகதைப்போட்டி

இலக்குவனார் திருவள்ளுவன் 20 சூலை 2014 .
தனித்தமிழ்இயக்கம், புதுச்சேரி

தனித்தமிழியக்கம் நடத்தும்
தனித்தமிழ்ச் சிறுகதைப்போட்டி

பரிசு 3000.00 உருவா

கதைகள் வந்துசேரவேண்டிய கடைசிநாள்: 31.7.2014
முகவரி : முனைவர்க. தமிழமல்லன், தலைவர், தனித்தமிழ்இயக்கம்,
66,மாரியம்மன்கோயில்தெரு,தட்டாஞ்சாவடி,புதுச்சேரி-605009 தொ:0413-2247072

நெறிமுறைகள்:

1. அ4 தாளில் 5 பக்கம்கொண்ட, குமுகாயக்கதைகள், பிறசொற்கள்
பிறமொழிப் பெயர்கள் கலவாத நடையில் எழுதப்படல் வேண்டும்.
2.கதையின் இரண்டு படிகளை அனுப்ப வேண்டும்.
ஒருபடியில் மட்டும் பெயர், முகவரிகளைத் தனித்தாளில் இணைத்து அனுப்புக.
கதையின் ஏந்தப் பக்கத்திலும் எழுதியவர் பெயர் இருக்கக்கூடாது.
3 மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படா
4.தேர்தெடுக்கப்பட்ட கதைகள் ‘வெல்லும்தூயதமிழ்’ மாத இதழில் வெளியிடப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் அதற்கான விலை உருவா 20.00 இணைத்து அனுப்ப வேண்டும்
5.நடுவர் தீர்ப்பே இறுதியானது .
6. சிறுகதைப் படைப்பாளர் உறுதிமொழி இணைக்கவேண்டும்
பொறிஞர் இரா.தேவதாசு இவ்வாண்டு பரிசுகள் வழங்குகிறார்.
இரண்டு முதற் பரிசுகள் 750.00=1500
இரண்டு இரண்டாம் பரிசுகள் 500.00=1000
இரண்டு மூன்றாம் பரிசுகள் 250.00= 500
க.தமிழமல்லன்
தலைவர், தனித்தமிழ்இயக்கம், அகரமுதல 36

--
அயற் சொற்களையும் அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652
தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

எழுதியவர் : அனுப்புனர் - இலக்குவனார் த (26-Jul-14, 6:57 am)
பார்வை : 123

மேலே