என் ப்ரியமானவளுக்கு

என் ப்ரியமானவளுக்கு...

பூக்களை பறிக்காதீகள்
பூந்தோட்ட அறிவிப்பு பலகையை
பார்த்த பின்னும்

அங்கிருக்கும்
பூ தான் வேண்டுமென அடம்பிடித்து
என் வீரத்தை சோதனை செய்தாய்...!

தோட்டக்காரன்
கவனிக்காமலிருக்க
அவனை அவ்வப்போது காந்தியால்
நான் கவனித்துக்கொள்வதை அறியாதவளாய்...!!


நானும்
தயங்கித் தயங்கித்தான்
பூ பறித்து வந்தேன்

நீ
ரசிப்பதை ரசிக்கவே...!!!

#வாழ்க்கை சுவடுகளின் சில வரிகளிலிருந்து.

எழுதியவர் : OMPJ ஜாகிர் உசேன் (26-Jul-14, 9:43 pm)
சேர்த்தது : ஜாகிர் உசேன்
பார்வை : 64

மேலே