அரிவாள் ஏன் எடுத்தேன்
வழக்காடு மன்றத்தில்
வழக்கொன்று !
பெற்றோரை பேணுவது
யார் பொறுப்பு?
மூன்று மகனும்
இரண்டு மகளும்
பெற்ற மகராசன்
தள்ளாடும் வயதில்
வழக்காடு மன்றம்
வந்து நின்றார்!
வாய்தா கொடுத்து கொடுத்து
அல்வா கொடுத்தது நீதிமன்றம் !
இடுகாட்டு மரத்தில்
தூக்கில் தொங்கினார்
ஐந்து மக்களை பெற்ற
மகராசன்!
தூக்கி போடுவது யாரென்று
வழக்கொன்று வருமென்று !
* * *
இதனால் அரிவாள் எடுத்தேன் !
* * *
எத்தனையோ தேர்தல்
வந்தது!
ஏழைகளின் தோழன்
என்றான் ஒருவன் !
வீட்டுக் குழாயில்
பால் வருமென்றான் ஒருவன் !
அவனையும் இவனையும்
நம்பி வாக்களித்தான்
விவசாயி!
காவிரியும் வைகையும்
களவு போனது !
ஒட்டு போட்டவன்
உயிர் மாய்ந்து போனது !
* * *
இதனால் அரிவாள் எடுத்தேன் !
* * *
வீடு கட்ட கடன்
என்று வங்கி வந்தான் ஒருவன் !
முன்பணம் கட்ட
கடன் வாங்கினான் !
இன்று போய் நாளை வா!
வங்கி வாசகம் !
ஒட்டுவீடும் ஏலத்துக்கு வந்தது
வீடுகட்ட நினைத்தவன்
ரோட்டுக்கு வந்தான்!
* * *
இதனால்
* * *
களவு போனதென்று
காவல் நிலையம் சென்றான் !
களவு கண்டுபிடிக்க
கைக்கூலி கொடுத்து கொடுத்து
கடனாளி ஆகி நின்றான் !
* * *
இதனால்
* * *
மது வீட்டுக்கும் நாட்டுக்கும்
கேடு !
அரசாங்கம் அனுமதியோடு !
* * *
இதனால் அரிவாள் எடுத்தேன் !
யாரை முதலில் வெட்ட ?
எல்லாரும் குற்றவாளிகள் !
எங்கே அந்த கடவுள் !
அவனைத்தான் முதலில்
வெட்டவேண்டும் !
@ @ @/