கவிதைகள் நிரம்பிய பை

தனிமையில் இயற்கையை ரசித்தேன்
தவநிலை அதுவெனப் புரிந்தது.........!

இளமையில் கடமையை மதித்தேன்
இனிமையே அதுவெனப் புரிந்தது....!

முதுமையில் நானென்பதை மறந்தேன்
முக்தி நிலை அதுவெனப் புரிந்தது...!

அதோ......அதோ......

தூரத்தில் காற்றோடு கலந்தேன் - அது
துலங்காது புற விழிகளுக்கு எனப் புரிந்தது...!!

இப்படிக்கு......

காற்றில்லாத வெறும் பை......!!

( எனினும் நாலு பேராவது வேண்டும்
என் கனத்தை தூக்க......!! )

எழுதியவர் : HARI HARA NARAYANAN (1-Aug-14, 6:32 am)
பார்வை : 283

மேலே