விலையில்லாத தாய்ப்பாலுக்கு

என் வறுமை கோட்டில்
நான் பத்து மாதம்
கருவில் சுமந்து பெற்ற உனக்கு

எத்தனை சிரமப்பட்டும்
எப்படியாவது
என் ரத்தத்தை பாலாக்கி
உனக்கு தருகிறேன்...

கச்சை கொள்ளாத
மார்புக் கூட்டிற்குள்
நீ முட்டி முட்டி பால் குடிக்க
வேண்டும்....

காமமில்லாத மோகமில்லாத
இந்த இன்பம் நான் பெற்று

உன்னை வளர்த்து
நீ வளர்ந்து ஆளாகும்போது

பார்க்கும் அத்தனை பெண்களும்
ரதியாக தெரிந்தாலும்
உனக்கே உரியவளை மட்டும்
நீ பெண்டாள நினைக்க வேண்டும்...
மீதி அத்தனை பெண்களுக்கும்
நீ சகோதரனாக
மகனாக பேரனாகவே இருக்க வேண்டும்...

அன்று கிடைக்கும்
அந்த ஒரு பெருமைதான்
நான் உனக்கு இன்று தரும்
இந்த விலையில்லாத தாய்ப்பாலுக்கு
மேலும் பெருமை சேர்க்கும்
என் அன்பு மகனே....

(உலக தாய்ப்பால் தினம்)

எழுதியவர் : சாந்தி (2-Aug-14, 12:08 am)
பார்வை : 77

மேலே