திறமைகள்
கல்லை சிலை ஆக்கி
கற்பனையை கவியாக்கி
கலையை காட்சியாக்கி
வினையைப் பொருளாக்கி
விந்தையை செயலாக்கி
விரும்புவதை தம தாக்கி
மனதெல்லாம் நிறைவாகி
மாற்றங்கள் புதிதாக்கி
மதி நுட்பம் என்றாக்கி
தடம் பதித்த துறைகளாக்கி
தனக்கென தக்க வைத்தான்
தன் நிகரை இப்புவியில்
திறமையே மனிதனாகி
திரவியங்கள் செல்வமாக்கி
தினம் தினம் திளைக்கின்றான் மனிதன்