இன்பம் இருக்குது இருந்தும் கசக்குது

சிவந்த நெற்றி அடிவானத்தில்
மங்கையிட்ட திலகம் ஆதவன்

முடமோ முதுமையோ
இருக்கும் வரைக்கும் சிவக்கும் திலகம்

ஆதவன் மறைவில் காரிருள் சூழும்
அவனது மறைவில் அதுபோல் பெண்மை

பெண்மையின் அழகு ஆணின் சிறப்பு
பூவும் திலகமும் பெண்மையின் அழகு

அச்சமறியா பெண்ணும் அச்சத்தில் உறைவாள்
ஆண்மகன் இழப்பில் ...

பொதுவுடைமை என்பது
ஏட்டுச் சுரைக்காய்

வேசம் கட்டிய நய்யாண்டி
வீட்டுக்குள் பெண்மையோ போராடி
வெளியில் சிரிக்கிறாள் மெய்யாண்டி !!

இருக்கும் போது புரியாத மகிமை
இழந்தபின் அழுதாலும் வாராது !!

உணர்த்த சொல்வது இயற்க்கை
உணர்ந்து சொல்வது அறிவு !!

எழுதியவர் : கனகரத்தினம் (4-Aug-14, 8:22 am)
பார்வை : 474

மேலே