மழையோடு ஒரு ஒப்பந்தம்

பகல் என்றும் பாராமல்
இரவு என்றும் பாராமல்
என் வீட்டு சாளரங்களை
திறந்து காத்திருக்கிறேன்
தூது சென்ற மழைக்
குருவி பதில் எடுத்து
வரும் வரை .....
கதிரவன் மேற்கில்
விழி மூட - நானோ
இன்றும் மழைக் குருவிக்காய்
விழி திறந்து ....
என் ஒப்பந்தத்தை மழை
தேவன் ஏற்றிருப்பானா ?
அதனிடையே என்னுள்
ஆயிரம் கேள்விகள்
சாளரம் வழியே என்
பார்வை வானம் நோக்க
எனக்குள் பல கோடி
மின்சாரம் !!!
விரைகிறேன் வாசல் படிக்கு
மழைக்குருவி என் காதோரம்
முத்தமிட்டு வாழ்த்துச் சொன்னது
மழை தேவன் ஒப்பந்தம் ஏற்று
என்னை மகிழ்விக்க வருகிறதாம்
மழைக்குருவி பதில் சொல்ல
அதனிடையே என்னை மழை
தேவன் அனைத்துக் கொள்ள
நான் அவனுள் நனைந்து
மகிழ்ந்தேன்

எழுதியவர் : fasrina (5-Aug-14, 10:01 am)
பார்வை : 187

மேலே