உன் நினைவில் உருகும் பேரன்
பசிக்கிறது என்றவனைப் பார்க்கையில்
வந்தது உன் ஞாபகம் !
என்ன நினைத்தான் என்று தெரியவில்லை
என்னைப் பேரா என்றழைத்தபோது !
நான் இழந்த நீ எழுந்து
வந்ததுபோ லிருந்தது எனக்கு !
தாத்தா என்று அழைக்குமுன்
தா என அவன் கை நீண்டது !
என்னை மீறி நான் எடுத்த
பத்து ருபாய் நோட்டில் !
நான் பார்த்தது காந்திக்கு
பதில் உன் புன்சிரிப்பை !
என் மீது கை வைத்து
அவன் வாழ்த்த !
பல ஆண்டுகளுக்குப் பின்
மீண்டும் உன் ஸ்பரிசம் !
கண்ணில் நீர் பெருக கண்டேன் அவன்
கடந்து சென்ற பாதையை !
-உன் நினைவில் உருகும் பேரன்
(த.பிரவீன்குமார்)