நினைவு அஞ்சலி

ஈரைந்து மாதங்கள்
என்னை சுமந்துதாயே

படாத பாடுபட்டு
என்னை பெற்றெடுத்தாயே

தாலாட்டி சோறுட்டி
பாசமாய் வளர்த்தாயே

சோகத்தை சுமையாக தாங்கி
என்னை சுகமாய் வளர்த்தாயே

நான் கண்ணுரங்க
உன் உறக்கம் தொலைத்தாயே

என் கனவை நினைவாக்க
உன் வாழ்வு தொலைத்தாயே

நான் சுகமாய் வாழ
நீ சுமையை சுமந்தாயே

தாயே தாயே தாயே என்
உயிரினும் மேலான என் உறவே
என் தாயே

எங்கு சென்றாலும் என்னை
அழைத்துச்சென்றாயே
இன்று மட்டுமென்ன
என்னை மறந்துவிட்டாயா
என் அன்புத் தாயே.???

கலங்காத உன் மகன்
கலங்கிய நாள் நீ என்னைவிட்டு
பிரிந்த அந்த நாள்..!!!

கனவிலும் நினைத்ததில்லை
என்னை தனியாக
தவிக்கவிட்டுச் செல்வாயென்று
என் அன்புத் தாயே..!!!

நீ இருந்தபோது கண்ணீருக்கு
அர்த்தம் தெறியவில்லை
இன்று கண்ணீரே என் வாழ்க்கையாகிவிட்டதே
என் அன்புத் தாயே..!!!

பிரிந்தது போதும் தாயே
மறவாமல் அழைத்துச் செல் உன்னோடு
கண்ணீருடன் காத்திருக்கிறேன்
உன் வரவை வேண்டி உன் அன்பு மகன்..!!!

எழுதியவர் : பார்த்தீபன் (10-Aug-14, 10:44 pm)
பார்வை : 142

மேலே