அவளில்லாமல் தனிமையில்

என்னை சுற்றி எங்கும் பசுமை நிறைந்த புல்வெளியின் கூட்டம்

மஞ்சள் வண்ணம் மறைந்து கருமை நிறம் பூசிக்கொள்ளும் வானம்

மேகக்கூட்டங்கள் இடையே எட்டி எட்டி பார்க்கும் நிலா

ஆங்காங்கே தங்கம் போல மின்னும் விண்மீன்கள்

மேகத்தால் இந்த காற்று வரையும் ஓவியம்

அழகாய் என்னை வருடிச்செல்லும் பூங்காற்று
இதனோடு அவளில்லாமல் தனிமையில் நான்

எழுதியவர் : சி.விஜய சாரதி (12-Aug-14, 7:49 pm)
சேர்த்தது : vijayasarathysvs
பார்வை : 255

சிறந்த கவிதைகள்

மேலே