அம்மா

சுடுச்சோறு நான் உண்ண
சுகமாய் சமைத்தாள்...
எங்கள் வயிற்று பசியாற
தன் வயிறை காயவைத்தவள்...
பழையவற்றை அவள் எடுத்துக்கொண்டு...
புதியவற்றை எனக்காய்க் கொடுத்தவள்...
அவள்தான்...
ஒவ்வொரு வலியின் போதும்
நான் கூறும் வார்த்தை......
அம்மா...........
-மூ.முத்துச்செல்வி