நிறு படியுங்கள் - எங்கே சுதந்திரம்

'' நின்று படியுங்கள் - ' எங்கே சுதந்திரம் //

'' மதக்கலவரத்தை மற்றவனா - கொண்டு வந்தான் ,
இந்த மண்ணின் மைந்தந்தானே //

'' வரதட்சணை கொடுமையை -வந்தவனா கொண்டுவந்தான் ,
இங்கு வாழ்ந்தவந்தானே //

'' அரசியல் ஊழல்கலை ஊரானா - கற்றுக்கொடுத்தான் ,
உள்ளூர் காரன்தானே //

''அராஜகத்தை கொண்டு வந்தவன் - அந்நியனா ? இல்லையே ,
உன் அயலான் தானே //

'' பெண்ணடிமையை பெண்டிங் பிரபுவா - கொண்டு வந்தான் ,
உள்ளூர் பேடிகள் தானே //

'' கள்ளச்சாரயத்தை கடல் கடந்தா - கொண்டுவந்தான் ,
உள்ளூர் கயவர்கள் தானே //

'' ஏன் பொய் சொல்கிறாய் - முன்னூரு(300) ஆண்டுகள் ,
அந்நியனிடம் அடிமையாய் இருந்தோம் என்று //

'' ஆயிரம் ஆண்டுகளாக உன்னிடமே - நீ ,
அடிமையாய் இருந்திருக்கின்றாய் ,,,
திருத்திக்கொள் ///

திருந்துவோம் என்ற நம்பிக்கையுடன் உங்கள் தோழன் சிவகவி ,,,,

எழுதியவர் : சிவகவி (15-Aug-14, 10:29 am)
பார்வை : 342

மேலே