என்ன யோசிக்கிறாய்
![](https://eluthu.com/images/loading.gif)
என்ன யோசிக்கிறாய் என்னை
யாசிக்க வைத்துவிட்டு !
வாசிக்க முடியாமல் தவிக்கிறேன்
என்னை நேசிக்க மறந்த உன் இதயத்தை !
பூசித்துக் கொண்டுதான் இருக்கிறேன் இறைவனை
தினம் உன் தரிசனம் காண !
மீண்டும் யோசிப்பாயா !
நீ எறிந்த என் காதலை எடுத்து
உன் இதயத்தி(ல்) வைக்க !