மௌனம்

நீ பேசாத நிலையில்
கிழிக்கப்பட்ட காகிதமாய் நான்
கண்ணீரால் அழிக்கப்பட்ட
மை எழுத்துக்களாய் நம் நேசம் .....

எப்போது என்றே தெரியாமல்
மௌன புயல் வீசிப்போகிறாய்
வாழவும் முடியாமல்
வீழவும் முடியாமல் வலிசுமந்து நிற்கிறேன்

இந்த உலகமே சூன்யமாகிப்போகிறது
உன் உதடுகள்
சுருட்டிக்கொண்ட வார்த்தைகளால்....

உன் வார்த்தை எனும் நிவாரணத்தினால்
நிரந்தமாக்கிவிடு
என் மகிழ்ச்சி மணித்துளிகளை....

மண்ணில் கலந்த மழைத்துளியாய்
என்னில் கலந்துவிடு
காதலால்.............

கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (22-Aug-14, 6:36 pm)
Tanglish : mounam
பார்வை : 109

மேலே